பாரதியார்



சுப்ரமணிய பாரதி 
எட்டயபுரம்
சின்னசாமி இலட்சுமி
செல்லம்மாள்
11/12/1882 முதல் 11/09/1921 

புனைப் பெயர்

காளிதாசன்
சக்திதாசன்
சாவித்திரி
ஓர் உத்தம தேசாபிமானி
நித்திய தீரர்
ஷெல்லிதாசன்

சிறப்பு பெயர்கள்

புதுக் கவிதையின் முன்னோடி
பைந்தமிழ் தேர்பாகன் (பாவேந்தர்)
சிந்துக்குத் தந்தை (பாவேந்தர்)
நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா(பாவேந்தர்)
காடு கமழும் கற்பூர சொற்கோ (பாவேந்தர்)
பாட்டுக்கொரு புலவன் பாரதி ( கவிமணி)
தற்கால இலக்கியத்தின் விட வெள்ளி 
தேசிய கவி
விடுதலைக்கவி
அமரக்கவி.முன்னறி புலவன்
மகாகவி
உலககவி
தமிழ்க்கவி
மக்கள் கவிஞர்
வரகவி


உரைநடை

ஞானரதம் ( தமிழின் முதல் உரைநடை காவியம்)
தராசு 
சந்திரிகையின் கதை
மாதர்
கலைகள்

கவிதை நூல்கள்

கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
பாஞ்சாலி சபதம்
காட்சி (வசன கவிதை)
புதிய ஆத்திச்சூடி
பாப்பா பாட்டு
பாரதமாத திருப்பள்ளி எழுச்சி
பாரததேவியின் திருத்தசாங்கம்
விநாயகர் நான்மணிமாலை

சிறுகதைகள்

திண்டிம சாஸ்திரி
பூலோக ரம்பை
ஆறில் ஒரு பங்கு
ஸ்வர்ண குமாரி
சின்ன சங்கரன் கதை
நவதந்திரக்கதைகள்
கதைக்கொத்து ( சிறுகதை தொகுப்பு)

நாடகம் 

ஜெகசித்திரம்


குறிப்பு.

* எட்டயபுர சமஸ்தான புலவர்கள் பாரதி என்ற பட்டம் அளித்தனர்
* தம்மை ஷெல்லிதாசன்  என்று அழைத்துக் கொண்டாார்
* தம் பூணூலை கனகலிங்கம் எனும் ஆதி திராவிடருக்கு அளித்தார்
* தன் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்தார்
* 1950 ல் சக்கரவர்த்தினி எனும் இதழ் தொடங்கினார்
* கர்மயோகி பாலபாரத் ஆகிய இதழ்களை நடத்தினார்
* சுதேசமித்திரன்  இதழில் துணை ஆசிரியர்
* இந்தியா இதழின் ஆசிரியர்
* சென்னை ஜனசங்கம் எனும் அமைப்பை தொடங்கினார்
* ஞான குரு நிவேதிதா தேவி
* அரசியல் குரு திலகர்
* 14 மொழிகள் தெரிந்தவர்
* வையாபுரிப்பிள்ளை = இவருடைய பாடல்களில் கருத்தாழமும் ஆற்றலும் எளிமையும் இசை நயமும், தொடர் இன்பமும் ஒருங்கே அமைய காண்கிறோம் இவ்வளவு சிறந்த கவிஞர் தமிழுலகில் சில நூற்றாண்டுகளாக தோன்றவில்லை
* Dr.H. Cousins அழகின் தூய  வாய்மையான வடிவத்தை பாரதி கவிதையிலே கான இயலும்
* இவர் தம்பி என அழைப்பது பரலி நெல்லையப்பர்
* பாரதியார் பாடல்களை  மக்களுக்கு  அறிமுகம் செய்தவர் பரலி நெல்லையப்பர்
* பாரதியின் பாடல்களை முதலில் வெளியிட்டவர் கிருஷ்ண சாமி
* பாரதியின் படத்தை வரைந்தவர் ஆர்ய பாஷ்யம்
* பாரதிக்கு மகாகவி என்ற பட்டம் கொடுத்தவர் வ.ரா(ராமசாமி)
* பாரதி சங்கம் - கல்கி
* மதுரை சேதுபதி உயர்நிலை பள்ளி தமிழாசிரியர்
* இவரின் முதல் பாடல் வெளிவந்தது - விவேகபானு (1904 தலைப்பு - தனிமை இரக்கம்)
* பதஞ்சலி சூத்திர உரை
* கீதை மொழிபெயர்ப்பு
* தாகூரி 11 சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்தார்
* பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில் தமிழை விட மற்றரு
 பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தம் உண்டாகிறது, தமிழனை விட மற்றொரு சாதி அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சமாதானம் இல்லை என  குறிப்பிடுகிறார்
* உரைநடை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கூடிய வரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி என்கிறாார்
* தமிழின் முதல் கருத்துப்படங்கள் இவருடையதே
* புவி அனைத்தும் போற்ற தமிழ்மொழியை புகழில் ஏற்ற கவியரசன் இல்லை என்ற குறை என்னால் தீர்ந்தது, நமக்கு தொழில் கவிதை ! நாட்டுக்கு உழைத்தல் ! இமை பொழுதும் சோராதிருத்தல் 
* சுவை புதிது ! பொருள் புதிது ! வளம் புதிது ! சொல் புதிது ! சோதி மிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மாகவிதை என் கவிதை  என்ற
 சூளுரைத்தார்


பாரதியை பற்றி பாரதிதாசன்

* பைந்தமிழ் தெர்ப்பாகன்
* செந்தமிழ் தேனீ
* சிந்துக்கு தந்தை
*குவிக்கும் கவிதைக் குயில் 
*இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையை கவிழ்க்கும் கவிமுரசு
*நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா
*காடு கமழும் கற்பூரச் சொற்கோ
*கற்பனை ஊற்றாம் கவைதையின் புதையல்
*திறம் பாட வந்த மறவன் புதிய அறம் பாட வந்த அறிஞர்
*என்னென்று  சொல்வேன் என்னென்று சொல்வேன் 
*தமிழால் பாரதி தகுதி பெற்றதும் 
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
* பாரதி உலககவி - அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர் ஓரூர்கொரு நாட்டுக்குரிய தான ஓட்டைச் சாண் நினைப்புடையார் அல்லர்


மேற்கோள்

* யாமரிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல் இனிதாவது எங்கும் காணோம் 
* சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா
* மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
* உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்
* தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
* செந்தமிழ் நாடென்ற போதினிலே

சிறப்பு

* கவிதையில்   சுயசரிதை
* பரலி நெல்லையப்பர்  இவர் ஒரு அவதார புருஷர் இவர் நூலை தமிழர் வேதமாக கொள்வார்
* நாமக்கல் கவிஞர்  பாரதியை    நினைைத்தாலுும் சுதந்திரத்தின்    ஆவேசம் சுருக்கென்று   ஏறும்       
இந்தியன் நான் என்றிடும் நல் இருமாப்பு உண்டாம்
* கவிமணி  
பாட்டுக்கொரு புலவன் பாரதி , 
இவரின் பாப்பா பாட்டில் நெஞ்சை பறிகொடுத்தேன்
* பாரதியின்   சுயசரிதமே   தமிழின்   முதல்   சுயசரிதை
* சிற்பி பாலசுப்ரமணியம் 
அவனுக்கு நந்தனார் கீர்த்தனையும் தெரியும்; ஜப்பானிய ஹைக்கூ லாவகமும் புரியும் தாகூரையும் அறிவான் வால்ட் விட்மனின் புதுக்கவிதை ஒளியையும் உணர்வான் காளிதாசனான அவன் ஷெல்லி தாசனாகவும் தன்னை அறிவித்து கொண்டவன் 
சுதந்திரத்தையும் பெண் உரிமையையும் புதுயுகக் கனவுகளையும் நவீனமான மொழிகளில் பேசியவன் என்கிறார்
* அனைவரும் தாய்நாடு எனக் கூற பாரதி மட்டும் தந்தையர் நாடு எனக் கூரியவர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதிதாசன்